Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் நாளை (மே 5) பிளஸ் 2 வகுப்புக்கும், மே 6ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும், மே 10ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இதனையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி: நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல. நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.